Feeds:
Posts
Comments

ட்விட்டரில் என் எண்ணங்கள்

  • மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தறதுங்கறது இதானா, நாசமா போச்சு #மின்வெட்டு கழகங்களை வாழ்த்த வயதில்லை வணக்குகிறோம்!
  • மக்களிடையே விழிப்புணர்வு – கழகங்கள் கொடுத்த கொடை #மின்வெட்டு
  • “விஷன் 2023′ ஆல் ஒளிரப்போகும் தமிழகம் – நாசமா போச்சு, அப்போ இப்போதைக்கு கரண்ட்டு வராது
  • தமிழையும், தமிழ் இனத்தையும், திராவிட பாரம்பரியத்தையும் காக்க எப்போதும் திமுகவை மக்கள் எதிர்க்கட்சியாவே வைத்து இருப்பது நல்லது போலும்
  • இந்தியாவுக்கும் தமிழகத்துக்குமான இடைவெளி அதிகரித்து கொண்டே இருக்கிறது உருவாக்கிகொடுத்த தலைவர்களுக்கு நன்றி #KillingFields
  • #KillingFields ஓரிரு நாள் வருத்தம்/அனுதாபம் கொள்வதோடு சரி, ஒரு துரும்பையும் என்னால் அசைக்க முடியாது. நான் ஒரு சராசரி, கையாலாகாதவன்.
  • அவசரப்பட்டு முடிவு எடுக்க முடியாது: சொல்கிறார் கருணாநிதி :: நீங்க என்னைக்கு தடாலடியா முடிவு எடுத்திருக்கீங்க, போங்க தாத்தா
  • ரீட்விட் போல் காறி துப்புவதுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தால் இது போன்ற ட்விட்களில் இருந்து கண்டிப்பாக ட்விட்டர் தப்பும் :)
  • வாழும் வாழ்கை குறித்த அச்சம் ஏற்படும் போதெல்லாம் பொதிகை அலைவரிசை பார்க்கிறேன்
  • க்லேடியேட்டர் படத்துல வர்ற மாதிரி சத்யமூர்த்தி பவன் டாப்ப ஓப்பன் பண்ணி நாலு சேர வாங்கிபோட்டா நாலு காசாவது பாக்கலாம் :)  #AllTimeEntertainers
  • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை படிக்க விடாமல் கொடுமை படுத்தும் நாள் இன்று ;) #சரசுவதிபூசை
  • இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானதற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி தான் காரணம் – வைகோ::இது தெரியாமல் யோக்கிய நண்பர்கள் வீட்டில் எனக்கு பூசை :)
  • கூடங்குளம் திட்டம் நிறைவேற ஆதரவு கொடுங்கள்! – பிரதமர் கடிதம் :: தயவு செய்து உள்ளாட்சி தேர்தல் முடியும் வரை காத்திருங்கள் முதல்வர் பதில் :)
  • மாற்றத்தை ஏற்படுத்த பாடுபடும் ஜெயலலிதா: அமெரிக்க அமைப்பு புகழாரம் :: எது இந்த ஆட்சி மாற்றமா? அதான் அல்ரெடி டுட்டுடு பண்ணீட்டீங்களே டாக்டர்
  • எனக்கு பிறகு என் மகன்கள் என்று தனது அசையும் சொத்துகளின் கணக்கை பகிரங்கமாக வெளியிட்ட கேப்டனுக்கு நன்றி ;)
  • புரட்சி கலைஞருடன் காம்ரேடுகள் கைகோர்த்துள்ள சூழலில் புரட்சி எந்நேரமும் வெடிக்கலாம் மக்கள் தாழ்வான பகுதியை நோக்கிஓட சித்தமாக இருக்கவேண்டும்.
  • விஜயகாந்த்துக்குப் பிறகுதான் அன்னாவே குரல் கொடுத்தார்- பிரேமலதா – ஆமா வீரப்பன இவரு புடிச்சதுக்கு அப்புறம் தான் விசயகுமரே புடிச்சார்
  • தனியாக போட்டியிடும் முடிவை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னரே எடுத்திருந்தால், 40, 50 MLAக்களை பெற்றிருப்போம் ராமதாசு – நான் சொல்லல, ஆப்பீசர்
  • ஒரு வகையில் கேப்டனும் தமிழ் குடிதாங்கியும் மதுவை கைவிட முடியாமல் தவிக்கின்றனர் ;)
  • 3 பெண்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்கி இருக்கும் நார்வே அரசே அமைதியாகவே இருக்கும் இந்த கணவன்மார்களுக்கு என்ன பரிசு தரப்போகிறீர்கள்?
  • தனித்து நின்று காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் – ஜி.கே.வாசனின் விருப்பம் :: அதற்கு முதல்படியாக டெபாசிட் தொகையை வாங்க வேண்டும்
  •  பிரதமருக்கு ஜெ எழுதிய கடிதம் குப்பை தொட்டிக்கு சென்றிருக்கும்-ராமதாஸ் :: சித்தப்பு, அத அம்மா போசுட்டே பண்ணி இருக்க மாட்டாங்க
  • சிறு வயதில் கேவி.மகாதேவனை ரசித்த என் தந்தையை பார்த்த அற்ப பார்வையை #Raja வின் நிகழ்ச்சியில் லயித்திருக்கும் எனக்கு துணைவியார் தருகிறார் :(
  • இளையராசா ஒரு சயனைடு எனில் ரகுமான் ஒரு சுலோ பாய்சன் – கொல்றாங்கப்பா :)

  • தொழில் நுட்ப வளர்ச்சியால் துப்பாக்கிகள் ஆறு முறைக்கு மேல் சுடுவதால், சண்டை காட்சிகளில் சுவாரசியமே போய்விடுகிறது ;)
  • ஐஸ்வர்யா ராய் பெயரில் புதிய கொய்யாபழம் வந்து இருக்கிறதாம், ஆனால் தர்க்கப்படி பார்த்தால் அது ஏற்கனவே கொய்யபட்ட ஒரு பழம்தானே ;)
  • சிக்கலான தருணங்களில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ள முடியுமா? #முடியல எசமான் ;)
  • கல்வி கூடங்களை எல்லாம் திறந்தவர் காமராஜர்தான் என்று கேள்விப்பட்டதும் நீண்ட காலம் அவர் மேல் கடுப்பில் இருந்தேன் :)  #WhenIWasAKid
  • ஞாயிறு காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வந்ததும் முகமெல்லாம் இருண்டு போகும், காலையில் பள்ளிக்கூடம் போக வேண்டுமே :(  #WhenIWasAKid
  • பேருந்தில் இடமில்லாமல் நின்று கொண்டிருந்த என்னை ஒரு கல்லூரி மாணவி சைகை செய்து சடாரென மடியில் அமர்த்திக்கொண்டாள் ;)  #WhenIWasAKid
  • வகுப்பில் பசங்க யாரவது பேசினால் இரண்டு பெண்களுக்கு நடுவே உட்கார வைத்து விடுவார்கள், நான் அடிக்கடி பேசுவேன் ;)  #WhenIWasaKid
  • 32 ஆண்டுகளாக எழுத்தை தவமாக கொண்ட சாருவே அண்மையில்தான் ஆவியில் இயங்கியசூழலில் 4வதுமுறை என் எழுத்துகளை வெளியிட்ட விகடனுக்கு நன்றி #குசும்பு
  • பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகிய நங்கை சிரித்தாள், சில்லறை சிதறியது போல் இருந்தது. கைப்பையில் ஓட்டைபோலும் சிதறியதை பொறுக்கி கொண்டாள் ;)
  • ஒத்து கொள்கிறேன், நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது, அது நமது செயல்களை எல்லாம் கண்காணிக்கின்றது! #கண்காணிப்புகேமரா :)
  • தன் வாழ்க்கையை படமாக்கும் ஷகிலா! :: பிட்டு பிட்டா ஓட்டுவாங்களா இல்ல முழு நீல திரைப்படமா ? #டவுட்டு
  • சொத்து கணக்கை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி#JokeOfTheDecade
  • நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு பதில் “Please sit down” “பைட்டியே” என்று பதிவு செய்த ஒலிநாடாக்களை பயன்படுத்தினால் என்ன?
  • ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிங்களுக்கு கொண்டாட்டம்,ஆனா கூத்தாடிங்களே ரெண்டுபட்டு நிக்கறோம் #ஷண்முகசுந்தரம் #கரகாட்டகாரன் #விஜயகுமார்குடும்பம்
  • கலைதிருட்டை ஒப்புக்கொண்டதை பூடகமாக பார்வையாளனுக்கு உணர்த்தவே படம் நெடுகிலும் கதாபாத்திரங்கள் தலைகுனிந்து நிற்கின்றனவோ? #குறியீடு #நந்தலாலா
  • பண்ணையார் மோட்டார் ரூம்ல வெச்சு கெடுக்கறதெல்லாம் சுத்த பொய்.நம்மள நல்ல ஏமாத்தியிருக்கானுக என கொந்தளிக்கிறான் புதிதாய் மணமான என் நண்பன்;) 18+
  • உடல் பயிற்சி செய்யாமல் எடையை குறைக்க வேண்டுமா? ஐந்து நாள் காய்ச்சலில் விழுந்து கஞ்சி குடித்தால் இது சாத்தியமாகிறது ;)
  • ஒட்டு கேட்பது ஆனந்தம் என்றால் பிரபலங்களின் உரையாடல்களை ஒட்டுகேட்பதேன்பது பரமானந்தம் #நிராராடியா #ஒலிநாடாக்கள்
  • தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்,உறக்கமிழந்தேன், நிம்மதியிழந்தேன்.தனிமையில் அகப்பட்டான் ரத்தம் சுவற்றில் தெறிக்க கொலைசெய்தேன்#மூட்டைபூச்சி
  • பயணங்களின் போது கெட்போனில் காதல் இசை காதுகளில் வழிய சமயங்களில் இசைக்கேற்ப அழகான மான்டேஜ் காட்சிகள் விரிவதை கவனித்து இருக்கிறீர்களா?
  • நானொன்றும் ஆணாதிக்கவாதி இல்லை, எனது வேலைகளை நானே செய்து கொள்கிறேன். மனைவி ஊரில் இல்லாத போது ;)
  • புத்தக சந்தைக்கு போகலாமென்றால் பரணில் இருக்கும் பல புத்தகங்கள் என்னை பார்த்து பரிகாசிப்பது போல ஒரு உணர்வு
  • பின்நவீனத்துவமும் நவீனத்துவமும் பிரியும் புள்ளியை பற்றி மனைவியிடம் விளக்கிக்கொண்டு இருந்தேன்,எந்த புள்ளியில் உறங்கிபோனாளோ கவனிக்கவில்லை
  • முடவர்களின் துணையோடு மாட்டுவண்டியில் நிலவுக்கு பயணம் செய்ய வேண்டுமென்றார் மேலாளர்.முடியாததென்றேன். உன் மனப்பாங்கில் குறை உள்ளதென்கிறார்/1
  • பாதி வழியில் மாட்டு வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டதென்றேன், செயின் கழண்டு விட்டதென்றேன்; பிரமாதம் தொடர்ந்து செல்லுங்கலென்றார் ;) /2
  • தனுஷ் ட்ரைலரில் சொல்வதை பார்த்தால் தமிழ்நாட்டில் மாப்பிள்ளைகளை விட ஆம்பளைங்களுக்கு பெரும் தட்டுபாடா இருக்கும் போலேயே ;)
  • புரட்சி தலைவர் எம்.சி.ஆரை திமுகாவில் இருந்து விலக்கியதை கண்டித்து அண்ணா அறிவாலயத்தின் முன் திரு.தங்கபாலு நாளை ஆர்ப்பாட்டம் ;) #கப்சா
  • வருசத்துக்கு ஒரு தடவ வந்தாதான் அது நமக்கு தீபாவளி, வருஷம் பூரா வந்தா அதுவே தலைவலி #IPL-4
  • ரசினிக்கே மூச்சிரைத்த போது தமிழக மக்கள் சுவாசித்து கொண்டு இருந்தது இன்னும் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது :( #ரசினிபாறைகள்

ட்விட்டரில் என் எண்ணங்கள்

திரைப்படம் சார்ந்தவை

  • Saw “Eyes wide shut” by stanley cubrick and Paranormal activity – Awesome cinema experience
  • My Name is khan – Honest and Daring attempt on a sensitive topic, brilliant acting., But after climax the movie went on for till 25 minutes
  • http://tinyurl.com/yjpr7qa – saw Raging bull yest. Robert deniro, the man of dedication, Six packs and a 30 KG belly on the same movie
  • மகாதீரா – சில மசாலா கிளிஷேக்களை தவிர்த்து நல்ல ஆக்சன் என்டர்டைனர்
  • http://tinyurl.com/y8txsf6 – வெங்கட் பிரபு – சி.எஸ்.அமுதன் ஏப்ரல் பூல் அட்டூழியம்
  • கிம்-கி-டுக்கின் samritan girl மற்றும் 3-Iron பார்த்தேன்…மிகவும் அருமை
  • #பையா – ஏன்யா?
  • ‘காலணியில் நுழைந்துவிட்ட சிறு கல்போல உறுத்திக் கொண்டிருக்க வேண்டும் திரைப்படங்கள்’ – லார்ஸ் வான் http://tinyurl.com/zborb1
  • A good story is worth more than a old trumpet – “The legend of 1900″ Awesome movie by Giuseppe Tornatore
  • http://tinyurl.com/ddwxwk – Sleuth (1972) Think of the perfect crime. then go one step further. One of the best thrillers ever made!
  • நேற்றிரவு என் மனதில் #Inception ஐ விதைத்து கிறிஸ்டோபர் நோலனோடு நான் கண்டது ஐந்தடுக்கு கனவு!
  • Watched #PAPRIKA.Dream and reality Merges in it. #Inception is certainly not a copy of it except the Lift and mirror sequences
  • களவாணி பார்த்தேன், நல்ல படம் என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம். ஆண் பாவத்தோடு ஒப்பீடு செய்வதெல்லாம் ஜீரணிக்க முடியவில்லை
  • #ராவணன் பார்த்தேன். மற்ற எல்லா தொழில் நுட்ப கலைஞர்களும் சர்வதேச தரத்தில் பங்காற்றி இருந்தார்கள். இதில் மணிரத்னம் என்பவர் என்ன செய்தார்?
  • ஊரே ஒரே பரபரப்பா இருக்கே, #எந்திரன் அப்படிங்கறது ஒரு தமிழ் படமா? ;)
  • Watched #TheSongofsparrows. Majid majidi is painting his movies.Fantabulous acting by Reza Naji’s as well.Yet another close to heart movie

ட்விட்டரில் என் எண்ணங்கள்

  • பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் சுருக்கம் பெற்று இன்று முதல் @balavin_tweets, @Piliral ஆகா மாற்றப்படுகிறது. ஆதரவை தொடரவும் :)
  • ஷாப்பிங் போகலாம் என்றாள், சலித்தேன்.கேசரியில் உப்பு கரித்தது; சிரித்தேன், புளி சாதத்திலேயே முந்திரி பருப்பை கண்டேன் :)
  • மனைவி பச்சரிசி வாங்கி வரச்சொன்னாள். வாங்கி வந்தேன், வெள்ளையாக இருந்தது :(
  • வீட்டுல காப்பி ஆறி போனா ஆத்திரப்படும் அன்பர்கள் காப்பி டே சென்று கோல்ட் காப்பி சாப்பிட கடவது #ஒருமனைவியின்சாபம்
  • Somehow I feel the “Snooze” in the Alarm is the greatest invention of this century #thoughtoftheday
  • ஊசிய பாத்து சல்லடை சொல்லுச்சாம் உனக்கொரு ஓட்டை இருக்குன்னு!
  • What is the landmark for LANDMARK shop?
  • ஏன் சன் மியூசிக் தொகுப்பாளர்கள் அனைவரும் பொங்கல் சாப்ட மாதிரியே பேசறாங்க. லேகா வாஷிங்டன் மாதிரி ஒரு தொகுப்பாளினி வரவே மாட்டாங்களா?
  • http://tinyurl.com/3yvor9t – தேனில்-ஊறவிட்ட-பலா குரலில் கரைந்து கொண்டு இருக்கேன். #ஸ்வர்ணாநேரம்
  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு #உலகின்முதல்ட்வீட்
  • சிங்கபூர் மணி vs ஜெர்மனி பால்; அட பதறுகளா. உடனடியாக குடியரசு கட்டுரைகளை ஆங்கிலத்துல மொழி பெயர்கணும். #பெரியாரின்அவசியம்தேவை
  • எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு #புதுக்குறள்
  • பொண்ணு கெடச்சாலும் புதன் கெடைக்காதுன்னு யாரவது சொன்னாலே கொலை வெறியாகிறான் திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் என் நண்பன்
  • இந்த காந்த குரலால் குளிர்ப்ரதேசத்திலும் பல முறை கரைந்தோடி இருக்கிறேன். என் விருப்பமான தொகுப்பு-http://tinyurl.com/3xny2pk #ஸ்வர்ணாநேரம்
  • ஸ்வர்ணலதாவின் இசை தொகுப்பு தயார் – http://goo.gl/e7Ht
  • தும்பை பூத்த பாதை,தேவதாஸைக் காதலிப்பவர்கள்,கனவின் மிச்சம்,கதைகளைத் தின்னும் ஆடு.ஏன் எஸ்ரா பத்தியின் தலைப்புகள் எல்லாமே ஒரு சைசாவே இருக்கு ;)
  • தேடித்தேடி 12 பாடல் பதிவு செய்து கேட்ட சுகம்,விரல் சொடுக்கில் இன்று நினைத்த பாடல் பாடும் போது ஏனோ இல்லை. தேடலில் தான் சுகமுள்ளது போலும்!
  • அரசியல் கட்சிகளின் ஆர்பாட்டங்களை எதிர்த்து யாரவது ஆர்பாட்டம் நடத்துவார்களா? #இது தேர்தல் வரும் பருவம்
  • ஸ்விஸ் பாங்கில் முடங்கி கிடக்கும் பணத்திற்கும் ஏழுமலையான் கோவிலில் முடங்கி கிடக்கும் நகைகளுக்கும் என்ன வித்யாசம்? #டவுட்டு
  • நான் வாழ்வில் உருப்படவே மாட்டேன் என்று வாழ்த்திய பொறியியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகளுக்கு என் பணிவான நன்றிகள்! #ஆசிரியர்தினம்
  • Black day!! My most favorite singer has passed away. you are unique and nobody else can replace you.Rest in peace#Swarnalatha
  • பேச்சுகளின் ஊடே துச்சமெனக்கருதப்படும் தலைமயிருக்கு, முடி உதிர்வதை தடுக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறதே எப்படி? #நகைமுரண்
  • அம்மாவை மாமா எனவும், அப்பாவை பாப்பா எனவும் அழைக்கிறது என் நண்பனின் NRI குழந்தை ;)  #mamasandpapas
  • சுவாமிஜிகளின் எண்ணிக்கை அதிகமாயிட்டு வர்றத பாத்தா…. கடவுளை மாற மனிதனை நினைன்னு சொன்னத ஒரு வேளை ஜனங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்களோ?
  • கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் – பழமொழி தீர்ப்புக்கு முன்பா? பின்பா?
  • அயோத்தியில் சர்ச்சுக்கு உரிய இடத்தில் ஏன் இவுங்கெல்லாம் சண்டை போடறாங்க ;)
  • பேருலயே “ஐயோ தீ” இருக்கறதாலதான் இவளோ பிரச்னையோ :) #அயோத்தி
  • சுதந்திரம் பெற்று தந்தவர் பிறந்த இந்நன்னாளில் மதுசூழ் வாழ்கையை அனுபவிக்க சுதந்திரமில்லாமல் போனது ;) #டாஸ்மாக் #லாக்ஜி
  • சூட்சமபடிமானங்களை நினைவுகளின் புதர்சரிவிலிருந்து மீட்டெடுப்பது இயலாதபோது முயலாமல் போவதென்பது அதன் சமன்பாடுகளை தகர்ப்பதை போலாகுமென்பதுவிதி
  • முதலில் ஜவுளி, நகைக்கடை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும், கத்தி முனையில் நடப்பதை போல ஒரு வாழ்கை :(
  • நம்பிக்கை அதானே எல்லாம் – கல்யாண் ஜ்வல்லர்ஸ்; நம்பி கடன் கேட்ட குடுப்பாங்களா பிரபு சார்?
  • கே.பியோட லெட்டர் பேட் தொலஞ்சு போய் ஒரு வருசமாச்சாமே? பஸ் ஸ்டாண்ட்ல பேசிக்கிட்டாங்க #குசும்பு
  • நாசிகளின் நுழைகளின் ஊடே ஊற்றுக்கண் ஊறி பெருக்கெடுத்தோடி தேக செயல்பாடுகளை செயலர செய்து ஆற்றமையால் பெருந்துயர் கொள்கிறேன் #இலக்கியஜலதோஷம்
  • இரு கோடுகள் தத்துவத்திற்கு உதாரண புருஷர்களாய் நம் இருகழகங்கள். அன்றும், இன்றும் என்றென்றும் #திமுக #அதிமுக
  • A bike is having ‘Anjaanenjan’ written in front number plate n #Azhagiri‘s photo in rear without having any traces of reg.no #Madurai rocks

சிகப்பு விழுந்தது.

முகில் கலைந்து காட்சிகள் விரியத்துவங்கியது!

அவிழ்கிற கால் சட்டையை

பிடித்து கொண்டு நொடியில்

தோன்றி மறையும் பாவ முகத்தோடு

ஒரு விளையாட்டை போல

பிச்சை எடுக்கும் சிறுவர்கள்.

டோரா பலூனை வைத்து

விளையாட வேண்டிய வயதில்

அதை விற்றுக் கொண்டு

ஒரு சிறுமி.

சிற்றுந்தின் உள்ளிருந்து

அதை  வாங்க அடம்பிடிக்கும் குழந்தை

சிடுசிடுவென் மறுக்கும் தந்தை.

யாசகம் கேட்டு

என் பாட்டியின் வயதையொத்த

மூதாட்டியின் நச்சரிப்பு.

மஞ்சள் விழுந்தது.

சலித்துக்கொண்டே பிச்சையிட்டேன்

முகமலர்ந்தவள் எதிர்பாரா கணத்தில்

என் தலையில்

கை வைத்து ஆசிர்வதிக்க

உடல் சிலிர்த்து 

உள்ளுக்குள்  என்னவோ செய்ய

பச்சை விழுந்தது.

தாக்கம்: பிரவீன்         தலைப்புக்கு நன்றி:ஜி

ஜன்னல் துவாரத்தின் வழி  சூரிய கற்றையில்
என்னறை தூசிகள் நடனம்
சுயத்தை இழந்து கொண்டிருக்கும் உணவு பொட்டலத்தில்
எறும்புகளின் படையெடுப்பு
என் வியர்வை அணிந்த உடை குவியலில்
கொசுக்களின் இளைபாறல்
மின்விசிறியின்  சுழற்சியென்
கண்ணின்மணிகளில்
முன்னெப்போதிலும்  ஈக்களின்
அரவணைப்பில்
என்னுடல் குளிர்ச்சிக்கும்
உஸ்னப்படுத்த முயற்சிக்கும் வெறுந்தரையின்  தோல்விக்கும்
மத்தியில்
யாருக்கேனும்  தெரிவிப்பீரா
நான் அழுகிக்கொண்டு இருக்கிறேனென்று!
=
தாக்கம்: பிரவீன் Image courtesy-http://fineartamerica.com

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக…

என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.

திடும்… திடும்… திடும்…

கலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say!

சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.

அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க “உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள், அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.

ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.

வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்க “செட்டில்” ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)

பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.

நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா “அழுத புள்ளைக்குதான் பால்”னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம் “இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு “அப்புறம்.., இவனுக்கு எப்போ”னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.

ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பா”னு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்”னு சலிச்சுக்குவானுக.

அவங்களும் “வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா”ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான

ஆனா “என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது?”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.

முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு “சின்ன வீடு” பாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.

நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும், ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. (இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)

ஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.

இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு “எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்”னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி “பெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்”னு கால்லேயே விழுந்திருவாங்க.

ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.

என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.

சின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்”னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்கு”ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலே”ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.

ஆக “ஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்”ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.

முதல கட்டமா “தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா”ன்னு வீட்டுல கேப்பாங்க.

ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.

“மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா”ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோ” அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே?ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.

“ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்”னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க…

கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.

இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.

இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. “நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே”ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.

சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.

அடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு, சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி)

இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப “என்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல?”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு”னு சொல்லவும் முடியாது)

எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.

இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பா “மணல் கயிறு” கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gate எல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க, அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில”பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்”னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.

ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.

இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா, பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.

ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன?

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…..

சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே, ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியா “சங்கீத ஸ்வரங்கள்”னு ஒரு ஸ்கீம் விட்டாலும் விடுவாங்க போல.

இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறது, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.

போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.

இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.

இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே”ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.

எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும், கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.

சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா…..ற்றதுக்குத் தயாராகுங்கள்!

Follow

Get every new post delivered to your Inbox.