Feeds:
Posts
Comments
  • தொழில் நுட்ப வளர்ச்சியால் துப்பாக்கிகள் ஆறு முறைக்கு மேல் சுடுவதால், சண்டை காட்சிகளில் சுவாரசியமே போய்விடுகிறது ;)
  • ஐஸ்வர்யா ராய் பெயரில் புதிய கொய்யாபழம் வந்து இருக்கிறதாம், ஆனால் தர்க்கப்படி பார்த்தால் அது ஏற்கனவே கொய்யபட்ட ஒரு பழம்தானே ;)
  • சிக்கலான தருணங்களில் என் மனைவி என்ன நினைக்கிறார் என்பதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்து கொள்ள முடியுமா? #முடியல எசமான் ;)
  • கல்வி கூடங்களை எல்லாம் திறந்தவர் காமராஜர்தான் என்று கேள்விப்பட்டதும் நீண்ட காலம் அவர் மேல் கடுப்பில் இருந்தேன் :)  #WhenIWasAKid
  • ஞாயிறு காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வந்ததும் முகமெல்லாம் இருண்டு போகும், காலையில் பள்ளிக்கூடம் போக வேண்டுமே :(  #WhenIWasAKid
  • பேருந்தில் இடமில்லாமல் நின்று கொண்டிருந்த என்னை ஒரு கல்லூரி மாணவி சைகை செய்து சடாரென மடியில் அமர்த்திக்கொண்டாள் ;)  #WhenIWasAKid
  • வகுப்பில் பசங்க யாரவது பேசினால் இரண்டு பெண்களுக்கு நடுவே உட்கார வைத்து விடுவார்கள், நான் அடிக்கடி பேசுவேன் ;)  #WhenIWasaKid
  • 32 ஆண்டுகளாக எழுத்தை தவமாக கொண்ட சாருவே அண்மையில்தான் ஆவியில் இயங்கியசூழலில் 4வதுமுறை என் எழுத்துகளை வெளியிட்ட விகடனுக்கு நன்றி #குசும்பு
  • பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகிய நங்கை சிரித்தாள், சில்லறை சிதறியது போல் இருந்தது. கைப்பையில் ஓட்டைபோலும் சிதறியதை பொறுக்கி கொண்டாள் ;)
  • ஒத்து கொள்கிறேன், நமக்கும் மேலே ஒரு சக்தி இருக்கிறது, அது நமது செயல்களை எல்லாம் கண்காணிக்கின்றது! #கண்காணிப்புகேமரா :)
  • தன் வாழ்க்கையை படமாக்கும் ஷகிலா! :: பிட்டு பிட்டா ஓட்டுவாங்களா இல்ல முழு நீல திரைப்படமா ? #டவுட்டு
  • சொத்து கணக்கை வெளியிட்டார் முதல்வர் கருணாநிதி#JokeOfTheDecade
  • நாடாளுமன்றத்தில் சபாநாயகருக்கு பதில் “Please sit down” “பைட்டியே” என்று பதிவு செய்த ஒலிநாடாக்களை பயன்படுத்தினால் என்ன?
  • ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிங்களுக்கு கொண்டாட்டம்,ஆனா கூத்தாடிங்களே ரெண்டுபட்டு நிக்கறோம் #ஷண்முகசுந்தரம் #கரகாட்டகாரன் #விஜயகுமார்குடும்பம்
  • கலைதிருட்டை ஒப்புக்கொண்டதை பூடகமாக பார்வையாளனுக்கு உணர்த்தவே படம் நெடுகிலும் கதாபாத்திரங்கள் தலைகுனிந்து நிற்கின்றனவோ? #குறியீடு #நந்தலாலா
  • பண்ணையார் மோட்டார் ரூம்ல வெச்சு கெடுக்கறதெல்லாம் சுத்த பொய்.நம்மள நல்ல ஏமாத்தியிருக்கானுக என கொந்தளிக்கிறான் புதிதாய் மணமான என் நண்பன்;) 18+
  • உடல் பயிற்சி செய்யாமல் எடையை குறைக்க வேண்டுமா? ஐந்து நாள் காய்ச்சலில் விழுந்து கஞ்சி குடித்தால் இது சாத்தியமாகிறது ;)
  • ஒட்டு கேட்பது ஆனந்தம் என்றால் பிரபலங்களின் உரையாடல்களை ஒட்டுகேட்பதேன்பது பரமானந்தம் #நிராராடியா #ஒலிநாடாக்கள்
  • தொந்தரவு செய்துகொண்டே இருந்தான்,உறக்கமிழந்தேன், நிம்மதியிழந்தேன்.தனிமையில் அகப்பட்டான் ரத்தம் சுவற்றில் தெறிக்க கொலைசெய்தேன்#மூட்டைபூச்சி
  • பயணங்களின் போது கெட்போனில் காதல் இசை காதுகளில் வழிய சமயங்களில் இசைக்கேற்ப அழகான மான்டேஜ் காட்சிகள் விரிவதை கவனித்து இருக்கிறீர்களா?
  • நானொன்றும் ஆணாதிக்கவாதி இல்லை, எனது வேலைகளை நானே செய்து கொள்கிறேன். மனைவி ஊரில் இல்லாத போது ;)
  • புத்தக சந்தைக்கு போகலாமென்றால் பரணில் இருக்கும் பல புத்தகங்கள் என்னை பார்த்து பரிகாசிப்பது போல ஒரு உணர்வு
  • பின்நவீனத்துவமும் நவீனத்துவமும் பிரியும் புள்ளியை பற்றி மனைவியிடம் விளக்கிக்கொண்டு இருந்தேன்,எந்த புள்ளியில் உறங்கிபோனாளோ கவனிக்கவில்லை
  • முடவர்களின் துணையோடு மாட்டுவண்டியில் நிலவுக்கு பயணம் செய்ய வேண்டுமென்றார் மேலாளர்.முடியாததென்றேன். உன் மனப்பாங்கில் குறை உள்ளதென்கிறார்/1
  • பாதி வழியில் மாட்டு வண்டியில் பெட்ரோல் தீர்ந்து விட்டதென்றேன், செயின் கழண்டு விட்டதென்றேன்; பிரமாதம் தொடர்ந்து செல்லுங்கலென்றார் ;) /2
  • தனுஷ் ட்ரைலரில் சொல்வதை பார்த்தால் தமிழ்நாட்டில் மாப்பிள்ளைகளை விட ஆம்பளைங்களுக்கு பெரும் தட்டுபாடா இருக்கும் போலேயே ;)
  • புரட்சி தலைவர் எம்.சி.ஆரை திமுகாவில் இருந்து விலக்கியதை கண்டித்து அண்ணா அறிவாலயத்தின் முன் திரு.தங்கபாலு நாளை ஆர்ப்பாட்டம் ;) #கப்சா
  • வருசத்துக்கு ஒரு தடவ வந்தாதான் அது நமக்கு தீபாவளி, வருஷம் பூரா வந்தா அதுவே தலைவலி #IPL-4
  • ரசினிக்கே மூச்சிரைத்த போது தமிழக மக்கள் சுவாசித்து கொண்டு இருந்தது இன்னும் நம்ப முடியாத ஒன்றாகவே இருக்கிறது :( #ரசினிபாறைகள்

ட்விட்டரில் என் எண்ணங்கள்

திரைப்படம் சார்ந்தவை

  • Saw “Eyes wide shut” by stanley cubrick and Paranormal activity – Awesome cinema experience
  • My Name is khan – Honest and Daring attempt on a sensitive topic, brilliant acting., But after climax the movie went on for till 25 minutes
  • http://tinyurl.com/yjpr7qa – saw Raging bull yest. Robert deniro, the man of dedication, Six packs and a 30 KG belly on the same movie
  • மகாதீரா – சில மசாலா கிளிஷேக்களை தவிர்த்து நல்ல ஆக்சன் என்டர்டைனர்
  • http://tinyurl.com/y8txsf6 – வெங்கட் பிரபு – சி.எஸ்.அமுதன் ஏப்ரல் பூல் அட்டூழியம்
  • கிம்-கி-டுக்கின் samritan girl மற்றும் 3-Iron பார்த்தேன்…மிகவும் அருமை
  • #பையா – ஏன்யா?
  • ‘காலணியில் நுழைந்துவிட்ட சிறு கல்போல உறுத்திக் கொண்டிருக்க வேண்டும் திரைப்படங்கள்’ – லார்ஸ் வான் http://tinyurl.com/zborb1
  • A good story is worth more than a old trumpet – “The legend of 1900″ Awesome movie by Giuseppe Tornatore
  • http://tinyurl.com/ddwxwk – Sleuth (1972) Think of the perfect crime. then go one step further. One of the best thrillers ever made!
  • நேற்றிரவு என் மனதில் #Inception ஐ விதைத்து கிறிஸ்டோபர் நோலனோடு நான் கண்டது ஐந்தடுக்கு கனவு!
  • Watched #PAPRIKA.Dream and reality Merges in it. #Inception is certainly not a copy of it except the Lift and mirror sequences
  • களவாணி பார்த்தேன், நல்ல படம் என்ற அளவில் ஏற்றுக்கொள்ளலாம். ஆண் பாவத்தோடு ஒப்பீடு செய்வதெல்லாம் ஜீரணிக்க முடியவில்லை
  • #ராவணன் பார்த்தேன். மற்ற எல்லா தொழில் நுட்ப கலைஞர்களும் சர்வதேச தரத்தில் பங்காற்றி இருந்தார்கள். இதில் மணிரத்னம் என்பவர் என்ன செய்தார்?
  • ஊரே ஒரே பரபரப்பா இருக்கே, #எந்திரன் அப்படிங்கறது ஒரு தமிழ் படமா? ;)
  • Watched #TheSongofsparrows. Majid majidi is painting his movies.Fantabulous acting by Reza Naji’s as well.Yet another close to heart movie

ட்விட்டரில் என் எண்ணங்கள்

  • பொது மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க பெயர் சுருக்கம் பெற்று இன்று முதல் @balavin_tweets, @Piliral ஆகா மாற்றப்படுகிறது. ஆதரவை தொடரவும் :)
  • ஷாப்பிங் போகலாம் என்றாள், சலித்தேன்.கேசரியில் உப்பு கரித்தது; சிரித்தேன், புளி சாதத்திலேயே முந்திரி பருப்பை கண்டேன் :)
  • மனைவி பச்சரிசி வாங்கி வரச்சொன்னாள். வாங்கி வந்தேன், வெள்ளையாக இருந்தது :(
  • வீட்டுல காப்பி ஆறி போனா ஆத்திரப்படும் அன்பர்கள் காப்பி டே சென்று கோல்ட் காப்பி சாப்பிட கடவது #ஒருமனைவியின்சாபம்
  • Somehow I feel the “Snooze” in the Alarm is the greatest invention of this century #thoughtoftheday
  • ஊசிய பாத்து சல்லடை சொல்லுச்சாம் உனக்கொரு ஓட்டை இருக்குன்னு!
  • What is the landmark for LANDMARK shop?
  • ஏன் சன் மியூசிக் தொகுப்பாளர்கள் அனைவரும் பொங்கல் சாப்ட மாதிரியே பேசறாங்க. லேகா வாஷிங்டன் மாதிரி ஒரு தொகுப்பாளினி வரவே மாட்டாங்களா?
  • http://tinyurl.com/3yvor9t – தேனில்-ஊறவிட்ட-பலா குரலில் கரைந்து கொண்டு இருக்கேன். #ஸ்வர்ணாநேரம்
  • அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு #உலகின்முதல்ட்வீட்
  • சிங்கபூர் மணி vs ஜெர்மனி பால்; அட பதறுகளா. உடனடியாக குடியரசு கட்டுரைகளை ஆங்கிலத்துல மொழி பெயர்கணும். #பெரியாரின்அவசியம்தேவை
  • எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு #புதுக்குறள்
  • பொண்ணு கெடச்சாலும் புதன் கெடைக்காதுன்னு யாரவது சொன்னாலே கொலை வெறியாகிறான் திருமணத்தை எதிர்நோக்கி இருக்கும் என் நண்பன்
  • இந்த காந்த குரலால் குளிர்ப்ரதேசத்திலும் பல முறை கரைந்தோடி இருக்கிறேன். என் விருப்பமான தொகுப்பு-http://tinyurl.com/3xny2pk #ஸ்வர்ணாநேரம்
  • ஸ்வர்ணலதாவின் இசை தொகுப்பு தயார் – http://goo.gl/e7Ht
  • தும்பை பூத்த பாதை,தேவதாஸைக் காதலிப்பவர்கள்,கனவின் மிச்சம்,கதைகளைத் தின்னும் ஆடு.ஏன் எஸ்ரா பத்தியின் தலைப்புகள் எல்லாமே ஒரு சைசாவே இருக்கு ;)
  • தேடித்தேடி 12 பாடல் பதிவு செய்து கேட்ட சுகம்,விரல் சொடுக்கில் இன்று நினைத்த பாடல் பாடும் போது ஏனோ இல்லை. தேடலில் தான் சுகமுள்ளது போலும்!
  • அரசியல் கட்சிகளின் ஆர்பாட்டங்களை எதிர்த்து யாரவது ஆர்பாட்டம் நடத்துவார்களா? #இது தேர்தல் வரும் பருவம்
  • ஸ்விஸ் பாங்கில் முடங்கி கிடக்கும் பணத்திற்கும் ஏழுமலையான் கோவிலில் முடங்கி கிடக்கும் நகைகளுக்கும் என்ன வித்யாசம்? #டவுட்டு
  • நான் வாழ்வில் உருப்படவே மாட்டேன் என்று வாழ்த்திய பொறியியல் கல்லூரி ஆசிரிய ஆசிரியைகளுக்கு என் பணிவான நன்றிகள்! #ஆசிரியர்தினம்
  • Black day!! My most favorite singer has passed away. you are unique and nobody else can replace you.Rest in peace#Swarnalatha
  • பேச்சுகளின் ஊடே துச்சமெனக்கருதப்படும் தலைமயிருக்கு, முடி உதிர்வதை தடுக்கும் விளம்பரங்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிறதே எப்படி? #நகைமுரண்
  • அம்மாவை மாமா எனவும், அப்பாவை பாப்பா எனவும் அழைக்கிறது என் நண்பனின் NRI குழந்தை ;)  #mamasandpapas
  • சுவாமிஜிகளின் எண்ணிக்கை அதிகமாயிட்டு வர்றத பாத்தா…. கடவுளை மாற மனிதனை நினைன்னு சொன்னத ஒரு வேளை ஜனங்க தப்பா புரிஞ்சிகிட்டாங்களோ?
  • கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் – பழமொழி தீர்ப்புக்கு முன்பா? பின்பா?
  • அயோத்தியில் சர்ச்சுக்கு உரிய இடத்தில் ஏன் இவுங்கெல்லாம் சண்டை போடறாங்க ;)
  • பேருலயே “ஐயோ தீ” இருக்கறதாலதான் இவளோ பிரச்னையோ :) #அயோத்தி
  • சுதந்திரம் பெற்று தந்தவர் பிறந்த இந்நன்னாளில் மதுசூழ் வாழ்கையை அனுபவிக்க சுதந்திரமில்லாமல் போனது ;) #டாஸ்மாக் #லாக்ஜி
  • சூட்சமபடிமானங்களை நினைவுகளின் புதர்சரிவிலிருந்து மீட்டெடுப்பது இயலாதபோது முயலாமல் போவதென்பது அதன் சமன்பாடுகளை தகர்ப்பதை போலாகுமென்பதுவிதி
  • முதலில் ஜவுளி, நகைக்கடை விளம்பரங்களை தடை செய்ய வேண்டும், கத்தி முனையில் நடப்பதை போல ஒரு வாழ்கை :(
  • நம்பிக்கை அதானே எல்லாம் – கல்யாண் ஜ்வல்லர்ஸ்; நம்பி கடன் கேட்ட குடுப்பாங்களா பிரபு சார்?
  • கே.பியோட லெட்டர் பேட் தொலஞ்சு போய் ஒரு வருசமாச்சாமே? பஸ் ஸ்டாண்ட்ல பேசிக்கிட்டாங்க #குசும்பு
  • நாசிகளின் நுழைகளின் ஊடே ஊற்றுக்கண் ஊறி பெருக்கெடுத்தோடி தேக செயல்பாடுகளை செயலர செய்து ஆற்றமையால் பெருந்துயர் கொள்கிறேன் #இலக்கியஜலதோஷம்
  • இரு கோடுகள் தத்துவத்திற்கு உதாரண புருஷர்களாய் நம் இருகழகங்கள். அன்றும், இன்றும் என்றென்றும் #திமுக #அதிமுக
  • A bike is having ‘Anjaanenjan’ written in front number plate n #Azhagiri‘s photo in rear without having any traces of reg.no #Madurai rocks

சிகப்பு விழுந்தது.

முகில் கலைந்து காட்சிகள் விரியத்துவங்கியது!

அவிழ்கிற கால் சட்டையை

பிடித்து கொண்டு நொடியில்

தோன்றி மறையும் பாவ முகத்தோடு

ஒரு விளையாட்டை போல

பிச்சை எடுக்கும் சிறுவர்கள்.

டோரா பலூனை வைத்து

விளையாட வேண்டிய வயதில்

அதை விற்றுக் கொண்டு

ஒரு சிறுமி.

சிற்றுந்தின் உள்ளிருந்து

அதை  வாங்க அடம்பிடிக்கும் குழந்தை

சிடுசிடுவென் மறுக்கும் தந்தை.

யாசகம் கேட்டு

என் பாட்டியின் வயதையொத்த

மூதாட்டியின் நச்சரிப்பு.

மஞ்சள் விழுந்தது.

சலித்துக்கொண்டே பிச்சையிட்டேன்

முகமலர்ந்தவள் எதிர்பாரா கணத்தில்

என் தலையில்

கை வைத்து ஆசிர்வதிக்க

உடல் சிலிர்த்து 

உள்ளுக்குள்  என்னவோ செய்ய

பச்சை விழுந்தது.

தாக்கம்: பிரவீன்         தலைப்புக்கு நன்றி:ஜி

ஜன்னல் துவாரத்தின் வழி  சூரிய கற்றையில்
என்னறை தூசிகள் நடனம்
சுயத்தை இழந்து கொண்டிருக்கும் உணவு பொட்டலத்தில்
எறும்புகளின் படையெடுப்பு
என் வியர்வை அணிந்த உடை குவியலில்
கொசுக்களின் இளைபாறல்
மின்விசிறியின்  சுழற்சியென்
கண்ணின்மணிகளில்
முன்னெப்போதிலும்  ஈக்களின்
அரவணைப்பில்
என்னுடல் குளிர்ச்சிக்கும்
உஸ்னப்படுத்த முயற்சிக்கும் வெறுந்தரையின்  தோல்விக்கும்
மத்தியில்
யாருக்கேனும்  தெரிவிப்பீரா
நான் அழுகிக்கொண்டு இருக்கிறேனென்று!
=
தாக்கம்: பிரவீன் Image courtesy-http://fineartamerica.com

பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்த/செய்யப்போகும் அன்பு உள்ளங்களுக்காக…

என் ரெண்டாவது பொண்ணு அப்படியே என்ன மாதிரி, நல்ல சூட்டிப்பு. அவளுக்கு இப்பவே ஒரு பாய் பிரண்ட் இருக்கான். என் மொதப் பொண்ணுக்குப் பதினாறு வயசாச்சு. இன்னும் அவளுக்கு ஒரு பாய் பிரண்ட் இல்ல, சும்மா பேச்சுக்குக் கூட ஒரு பையன வீட்டுக்குக் கூட்டிட்டு வந்ததில்ல. எப்படித்தான் கரை ஏறப் போறாளோ? – ஒரு அம்மாவின் அங்கலாய்ப்பு.

திடும்… திடும்… திடும்…

கலாச்சாரக் காவலர்கள், கலவரப்பட்டுக் கத்தியைத் தூக்க வேண்டியதில்லை. Drop your weapons, I say!

சம்பாஷணை நடந்தது ஐரோப்பியக் கண்டத்தில், கவலைப்பட்டவரும் ஒரு ஐரோப்பியர்.

அங்கெல்லாம் பதின்ம வயது வந்ததும் பெத்தவங்க “உன் வாழ்க்கை உன் கையில்”னு நிஜமாகவே தண்ணி தெளித்து விடுகிறார்கள், அதுக்கு முறையாக சென்ட்-ஆப் பார்ட்டி கூட உண்டாம்.

ஆனா நம்மூர்ல பையனோ பொண்ணோ ஸ்கூல், காலேஜ், வேலைக்குப் போயி, கல்யாணம் பண்ணிக்கற வரைக்கும் பெத்தவங்களோட ராடார் ப்ரீக்குவன்சிக்குள்ளதான் இருந்தாகணும்.

வைரமுத்து சொன்ன மூணாம் எட்டில் எல்லாம் இங்க யாருக்கும் திருமணமே நடக்கறதில்லை. நாலாம் எட்டுலதான் பசங்க செட்டில் ஆகவே ஆரம்பிக்கிறாங்க. (இங்க “செட்டில்” ஆகறதுங்கற வார்த்தைக்கான விளக்கம் நபருக்கு நபர் வேறுபட்டாலும், சாகற வரைக்கும் நம்ம மனசு செட்டில் ஆகாதுங்கறது வேற விஷயம்.)

பொதுவா நம்ம ஊருல பெத்தவங்களாப் பாத்து நிச்சயிக்கிற திருமணம், மத சடங்குகளைத் தவிர்த்து, பெரும்பாலும் ப்ராசஸ் எல்லாம் ஒரே மாதிரியாத்தான் இருக்கும். சில வீட்டுல சீக்கிரமாப் பொண்ணு பாக்க ஆரம்பிச்சிருவாங்க, சில வீட்டுல ஒத்தப்படை, கண்டம், திருநள்ளாறுனு கொஞ்சம் லேட்டாகும்.

நம்ப ஆளுகளும் பொறுத்துப் பொறுத்துப் பாப்பாங்க. வேலைக்கு ஆகலேன்னா “அழுத புள்ளைக்குதான் பால்”னு புரிஞ்சுக்கிட்டு, வீட்டுக்கு போனப் போடும்போதெல்லாம் “இப்போதான் ரமேஷ் கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன், ரவி கல்யாணத்துக்குப் போயிட்டு வந்தேன்”னு ஜாடையா பிட்டப் போட்டுப் பாப்பாங்க. அசரலேன்னா, கூட்டாளி ஒருத்தனப் புடிச்சு “அப்புறம்.., இவனுக்கு எப்போ”னு மெதுவா வீட்டுல கேக்கச் சொல்லுவானுக. எதுக்கும் மசியலேன்னா கொஞ்சம் கிரிமினலா யோசிக்க ஆரம்பிச்சிருவாங்க. பொண்ணுக கிட்ட அடிக்கடி பேசற மாதிரி ஒரு செட்-அப் பண்றது. இல்லேன்னா பொண்ணுகளோட வெளிய போற மாதிரி ஒரு பாவ்லா காட்றதுன்னு உருண்டு பொரண்டு எப்படியாவது தங்களோட கல்யாண ஆசைய வீட்டுக்குத் தெரிவிச்சிருவாங்க.

ஆனா என்னிக்காவது வீட்டுல இருந்து, “சரி உனக்குப் பாக்கலாமாப்பா”னு கேட்டா மட்டும், உடனே வெறச்சுக்குவானுக. என்னமோ இதெல்லாம் இவனுகளுக்குப் புடிக்காதுங்கற மாதிரி “ம்ம்.. பாக்கலாம் பாக்கலாம்”னு சலிச்சுக்குவானுக.

அவங்களும் “வேற யாரையாச்சும் மனசுல வெச்சிருக்கியாப்பா”ன்னு இவன் கண்ணாடி முன்னாடி நின்னுக்கிட்டு இருக்கும்போதுதான் கேப்பாங்க. இவன் எப்படியும் மனசுல ஒரு பத்துப் பதினஞ்சு பேர வெச்சிருப்பான். அதெல்லாம் சம்பந்தப்பட்டவங்களுக்குத் தெரியுமா அப்படிங்கறதுதான் இங்க கேள்வியே? கடைசியா ஒரு மாதிரியா மூஞ்சிய வெச்சுக்கிட்டு ” சரி என்னமோ பண்ணுங்க போங்க” அப்படின்னுட்டு பர்மிஷன்(!) குடுத்துருவான

ஆனா “என்ன மாதிரி பொண்ணுப்பா உனக்குப் பாக்கறது?”ன்னு அவங்க கேட்டாத்தான் இருக்கு தீபாவளி.

முதல்ல எல்லாரும் முன்னுரிமை தர்றது புறத்தோற்றத்துக்குதான். இந்த விஷயத்துல ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு “சின்ன வீடு” பாக்யராஜ் மாதிரி, சாமுத்ரிகா இலட்சணத்தோட வேலைக்குப் போகாத ஒரு பொண்ணு வேணும். சிலருக்கு வேலைக்குப் போகக்கூடிய, திறமையான மற்றும் அழகான பொண்ணு வேணும். தன்னையும் புரிஞ்சுக்கிட்டு, பத்தாததுக்குத் தன்னோட குடும்பத்தையும் புரிஞ்சுக்கணும், உயரம் அஞ்சே அரைக்கால் அடி இருக்கணும், பேசுனா பாடுனா மாதிரி இருக்கணும், பாடுனா ஆடுனா மாதிரி இருக்கணும், அப்படி, இப்பிடின்னு ஆயிரத்து எட்டரை இருக்கும்.

நம்ப பொண்ணுகளும் இதுக்கெல்லாம் சளச்சவங்க இல்லை. அவங்களுக்குப் பையன் அழகா இருக்கணும், ஆனா காதலிச்சிருக்கக் கூடாது. ஆன்-சைட்ல இருக்கணும், ஆனா எந்தக் கெட்ட பழக்கமும் இருக்கக் கூடாது. நாட்டுப் பற்று இருக்கணும், ஆனா மினிமம் H1B விசாவாவது வெச்சிருக்கணும். தாடி வெச்சா மாதிரி இருக்கணும், ஆனா ஷேவும் பண்ணி இருக்கணும் – அப்படிங்கற ரேஞ்சுல அவங்களும் நெறைய வெச்சிருப்பாங்க. (இத பத்தி வாலி கூடக் கொஞ்சம் விலாவாரியா சொல்லி இருக்கார்)

ஆனா ஒண்ணுங்க, இவங்கல்லாம் கேக்கறா மாதிரி எல்ல்ல்லாத் தகுதியோட இருக்கற ஒரு பொண்ணோ, பையனோ பாக்கணும்னா ஜேம்ஸ் கேமரோன் கிட்ட சொல்லித்தான் செய்யணும்.

இதுக்கெல்லாம் விதிவிலக்கா சிலபேரு “எதிர்பார்ப்புதான் ஏமாற்றத்தத் தரும்”னு புரிஞ்சுக்கிட்டு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி “பெரியவங்க, நீங்களாப் பாத்து எதச் செஞ்சாலும், அத நான் ஏத்துக்கறேன்”னு கால்லேயே விழுந்திருவாங்க.

ஏன்னா, ஒவ்வொருத்தருக்கும் இது வாழ்க்கையோட செகண்ட்-ஆப். ஆதனால “ஆயிரத்தில் ஒருவன்” மாதிரி எதுவும் ஆயிடக்கூடாதுங்கறதுல ரொம்பக் கவனமா இருப்பாங்க.

என்னதான் இத்தன நாளா பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், சினிமா தியேட்டர்னு பல எடங்கள்ல இவன் பொண்ணு பாத்து இருந்தாலும் அதுக்கப்புறம்தான் ஆபீசியலா குடும்பத்தோட பொண்ணு பாக்க ஆரம்பிப்பான்.

சின்ன வயசுல, “வாடா, கல்யாணத்துக்குப் போகலாம்”னு கூப்பிட்டா, “வேற வேலை இல்லை உங்களுக்கு”ன்னுட்டு குடுகுடுன்னு கிரிக்கெட் வெளையாட ஓடிப் போயிருவான். ஆனா இப்போ , “ஏம்மா, இந்த மாசம் யாருக்கும் கல்யாணம் வைக்கலையா, ஒரு பத்திரிகைக் கூட வரலே”ன்னு கேக்கற அளவுக்கு மாறிப் போய்டுவான். ஏன்னா, எப்படிப் பாத்தாலும் எல்லாக் கல்யாணத்துலயும், இந்த மாதிரிக் குறைஞ்சது கண்ணுக்குத் தெரியாம நாலஞ்சு குரூப் பொண்ணு பாத்துக்கிட்டுதான் இருப்பாங்க.

ஆக “ஒரு கல்யாணத்துக்கோ, கோவிலுக்கோ போயி சைட் அடிக்கறவன் மனுஷன், குடும்பத்தோட போயி சைட் அடிக்கறவன் பெரிய மனுஷன்”ங்கறத அன்னலட்சுமி சொல்லாமேயே நாம புரிஞ்சுக்கணும்.

முதல கட்டமா “தம்பி ஒரு நல்ல போட்டோ ஒண்ணு இருந்தா எடுத்துக் குடுப்பா”ன்னு வீட்டுல கேப்பாங்க.

ஆனா அப்படி இவங்க ஒரு நாள் கேப்பாங்கன்னு சொல்லி, அந்த நல்ல போட்டோவ அவன் கடைசி ரெண்டு வருசமாத் தொடர்ச்சியா எடுத்துகிட்டுதான் இருந்திருப்பான்.

“மாப்ள, என்ன மட்டும் ஒரு சோலோ எட்றா”ன்னு எதாவது பிக்னிக் ஸ்பாட்ல யாராவது சொல்லி உங்க காதுல விழுந்தா, “சோலோ” அப்படின்னாலே ஒருத்தர மட்டும் எடுக்கறது தானே?ன்னெல்லாம் அறிவு பூர்வமா ஆராய்ச்சி பண்ணாம, அங்க ஒருத்தர் மேட்ரிமோனிக்கு ப்ரோபைல் போட்டோ எடுக்க ட்ரை பண்ணிட்டு இருக்கார்னு அவரு ஜாதகத்தப் பாக்காமயே நீங்க பட்டுன்னு சொல்லிறலாம்.

“ப்ளீஸ்டா, மறுபடியும் எட்றா, தல கலைஞ்சிரிச்சு / கண்ண மூடிட்டேன்”னு கூடவே இன்னொரு சவுண்டும் வரும் கண்டுக்காதீங்க…

கூந்தல் வனப்புக் குறைஞ்சவங்க எதிர்காத்து இல்லாத எடமா நிக்கணும், ஷாம்பூ கீம்பு போட்டு புஸ்ஸுனு வெச்சுக்கணும், தொப்பை இருக்கறவங்க மூச்ச வேற நல்லா இழுத்துப் புடிச்சுகிட்டே சிரிக்கணும்னு போஸ் குடுக்கறதும் கூட ரொம்ப ஒரு கஷ்டமான வேலதாங்க.

இந்த போடோடோவ எடுக்க மாட்றவன்தாங்க, உலகத்துலேயே பெரிய பொறுமைசாலி.

இதுல பரஸ்பரம் மாத்தி மாத்தி எடுத்துக்கறதும் உண்டு. “நான் பார் உன்ன நச்சுனு எடுத்திருக்கேன், நீ ஏன்டா இப்படி எடுத்து வெச்சிருக்கே”ன்னு அடிச்சுக்குவாங்க. இப்படி ஒருத்தருக்கு எடுக்கப்படும் சாம்பிள் சராசரியா 300ல இருந்து 500 வரைக்குமாவது இருக்கும். (டிஜிட்டல் கேமராவக் கண்டு புடிச்சவன் நல்லா இருக்கணும்) இப்படி இது வரைக்கும் உலகத்துல எடுத்த சோலோவ பிரிண்ட் போட்டு அடுக்கி வெச்சா அகிலமே அரை கிரௌண்ட் மாதிரிதான் தெரியும்.வித விதமா, ரகம் ரகமா ட்ரை பண்ணி, ட்ரை பண்ணி அரைகுறை மனசோடதான் ஒவ்வொருத்தரும் அந்த பைனல் போட்டோவப் போட்டிக்கு அனுப்பறாங்க.

சில பேரு நேர ஸ்டுடியோவுக்கு போயி, சாந்தமா முகத்துல பால் வடிய, ஒரே ஷாட்ல மேட்டர சிம்ப்ளா முடிச்சிருவாங்க.

அடுத்து பயோடேட்டா, ஜாதகத்தோட அந்த நல்ல போட்டோவையும் வெச்சு சமுதாய நதியில கலக்க விட்றுவாங்க.(ஏனைய வழிகள் – மாட்ரிமோனி சைட், மங்கள சந்திப்பு, சொந்தக்காரங்க விடு தூது இத்யாதி, இத்யாதி)

இந்தக் கால கட்டத்துல பசங்க ரொம்பக் கண்ணியமாவும், கனிவாவும், கவனமாகவும் நடந்துக்குவாங்க. அவங்க சம்பந்தமான ஆளுகளோட அப்பப்ப “என்ன பாஸ், உங்க பைல் க்ளோஸ் ஆயிடுச்சு போல? நம்புளுது ஒண்ணும் முடிவே தெரியல?”னு பரஸ்பரம் விசாரிச்சுக்குவாங்க. இதே கால கட்டத்துல அவங்களுக்குத் தெரிஞ்சோ தெரியாமலோ பெரும்பாலும் ஒரு பேக் ரவுண்ட் செக்கும் நடக்கும். (“இது என்னோட நேர்மையக் கேலி பண்ற மாதிரி இருக்கு”னு சொல்லவும் முடியாது)

எப்படியும் பத்து பொண்ணு போட்டோ வருதுன்னா, இவன் ஒரு ரெண்டு பேர செலக்ட் பண்ணி, அது டேலி ஆகி மேலிடத்துக்குப் (பெத்தவங்கதாங்க) போயி, லைட்டா ஒரு பேக்ரவுண்ட் ஸ்கேன் ஆகி, அப்ரூவல் ஆனதும் நேர நம்ம வில்லன் இருக்காரே, அதாங்க ஜோசியரு, அவருகிட்ட பைல் மூவ் ஆகும். அவரு வேறென்ன சொல்லிடுவாரு, “ரெண்டு பொருத்தம் கூட இல்ல, மீறிப் பண்ணி வெச்சா 2012ல உலகம் அழியறதுக்கு நாம் பொறுப்பாயிடுவோம்”ங்கறா மாதிரி எதாவது சொல்லிடுவாரு.

இதே விளையாட்டு அங்க பொண்ணு வீட்டுலயும் நடக்கும். பெரும்பாலும் நம்மாள் செலக்ட் பண்ணி வெச்ச அந்தப் பத்துல ரெண்டு பொண்ணு, இவனப் பத்துல எட்டு ஆக்கி வெச்சிருக்கும். ஆக, என்னிக்கு ரெண்டு கிளியும் ஒரே சீட்ட எடுக்குதோ அன்னி வரைக்கும் இந்த விளையாட்டுத் தொடர்ந்துகிட்டே இருக்கும்.

ஒரு கட்டத்துல இந்த விளையாட்டு போர் அடிச்சுப் போயி, வெறப்பா “மணல் கயிறு” கிட்டு மணி மாதிரி இருந்தவங்க மொதல்ல கண்டிசன்ல இருக்கற AND Gate எல்லாத்தையும் OR Gateஆ மாத்திப் பாப்பாங்க, அப்புறம் நாள்பட, நாள்பட கண்டிசன்களையே ஒவ்வொண்ணாக் கழட்டிவிட்டுக்கூடப் பாப்பாங்க. கடைசில”பெட்ரோமாக்ஸ் கெடைக்கலேனா கூடப் போவுது, பந்தம் கெடச்சாக் கூடப் போதும்”னு எதார்த்தத்துக்கு எறங்கி வந்தவங்க நெறையப் பேரு. .விட்டுக் கொடுத்தலே விவாகம், காம்ப்ரமைஸ் தான் கல்யாணம் அப்படிங்கறத இங்க இருந்தே அவங்க புரிசுக்குவாங்க.

ரெண்டு குடும்பமும் பரஸ்பரம் செலக்ட் பண்ணி, ஜோசியர் சார் ஓகே பண்ணி, ஒரு நல்ல நாளாப் பார்த்து பொண்ணு பாக்க ஏற்பாடு ஆகும். பொண்ணு பாக்கப் போகும் போதே முக்காவாசி முடிவு பண்ணிட்டுத்தான் போவாங்க. அந்தக் கால்வாசிய முடிவு பண்ண ரெண்டு பேரும் தனியாப் பேசணும்னு சொல்லுவாங்க. பத்து விநாடி மௌனம், முப்பது விநாடி ஸ்டார்ட்டிங் ட்ரபுள்,கொஞ்சம் உபசரிப்பு, சில சுய தம்பட்டம், “அது தெரியுமா, இது தெரியுமா”, “இது புடிக்குமா, அது புடிக்குமா”, இடைல இடைல கொஞ்சம் வழிசல்னு ஒரு மாதிரியாப் பேசிட்டு வெளிய வந்திருவாங்க.

இதுதான் பொண்ணுன்னு உறுதி ஆயிட்டா, பிரச்னை இல்ல. இல்லேன்னா என்ன? திரும்ப மேல இருக்கற பத்தியப் படிங்க.

ஒரு வழியா பொண்ணு ஓகே ஆயிடுச்சுன்னா, பெத்தவங்க தேதி குறிக்கறாங்களோ இல்லையோ, நம்மாளு மொதல்ல போன் நம்பரக் குறிச்சிக்குவான். அப்புறமென்ன?

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா…..

சில பேரெல்லாம் ரொம்ப வெவரம். போகும் போதே, ஒரு சி.யு.ஜி பேக்கேஜோடதான் பொண்ணு பாக்கவே போறாங்க. இன்னும் கொஞ்சநாள்ல செல்போன்காரங்க இதுக்குன்னு தனியா “சங்கீத ஸ்வரங்கள்”னு ஒரு ஸ்கீம் விட்டாலும் விடுவாங்க போல.

இதுல நெறைய வெரைட்டி இருக்காங்க, பேட்டரி மாத்தி, சிம் மாத்தி, போன் மாத்தித் தொடர்ந்து பேசிக்கிட்டே இருக்கறது, விடிய விடியப் பேசறது, விடிஞ்சு எந்திரிச்சுப் பேசறது. அலாரம் வெச்சுப் பேசறது, தொடர்ந்து நாப்பது மணி நேரம் பேசறதுன்னு சத்தமில்லாம நெறையப் பேரு கின்னஸ் சாதனை புரிஞ்சுகிட்டுதான் இருக்காங்க. இந்த மாதிரி ஆளுங்களப் பாத்தீங்கன்னா நைட் ஷிப்ட்ல இருந்து வந்த எபக்ட்லதான் காலைல ஆஃபீசுக்கே வருவாங்க.

போன்ல பேசற நேரம் போக அப்பப்ப சினிமாவுக்கோ, பீச்சுக்கோ, பார்க்குக்கோ வீட்டுக்குத் தெரிஞ்சோ, தெரியாமையோ போயிட்டு வருவாங்க. எங்க காலத்துல நாங்க பாக்காததா அப்படின்னு பெரியவங்களும் கண்டுக்காத மாதிரி விட்றுவாங்க.

இந்தக் காலகட்டத்தில் அம்பிகள் கூட ரெமோவாக மாறியதையும், வீரவசனம் பேசிய பல ‘மௌனம் பேசியதே’ சூர்யாகளும் சரமாரியாகச் சரண் அடைந்ததையும் சரித்திரம் சிரிப்போடு, சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.

கல்யாண நாள் நெருங்க நெருங்க, பத்திரிகை விநியோகம், புதுத் துணி எடுக்கறதுன்னு பரபரப்பாக் காலம் ஓடிரும்.

இன்னியத் தேதிக்கு நம்ம நட்பு வட்டாரங்களுக்குப் பத்திரிகை கொடுக்கறது ஒரு பெரிய விஷயமே இல்ல. ரெண்டே நிமிஷம். இன்விடேசன ஸ்கேன் பண்ணி, “Please consider this as my personal invite”னு மெயில்ல அட்டாச் பண்ணிட்டம்னா வேலை முடிஞ்சுது. ஆனா பழைய டைரியைத் தூசு தட்டி எடுத்து, “மனம் கவர்ந்த மங்கையை மணக்கும் முன் மணவோலை அனுப்ப மறவாதே”ன்னு ஆட்டோகிராப் போட்டுக் குடுத்த எல்லாக் கல்லூரி நண்பர்களோட அட்ரஸையும் கண்டுபுடிச்சு, அவங்களுக்குப் பத்திரிகையத் தபால்லேயோ/ நேர்லேயோ குடுக்கற சொகத்தக் கொஞ்சம் கொஞ்சமா நாம இழந்துகிட்டு வர்றோம் அப்படிங்கறத யாரும் மறுக்க முடியாது.

எந்த மதத்தவங்க கல்யாணமா இருந்தாலும், கல்யாணத்துக்கு வர்ற நம்ப நண்பர்களுக்குத் தாகசாந்திக்கு வழி பண்ணலேன்னா நாம நன்றி மறந்தவங்க ஆயிருவோம். அப்புறம் எவளோ செலவு பண்ணிக் கல்யாணம் பண்ணினாலும் அதுல ஒரு புண்ணியம் இல்லாமப் போகக் கூட வாய்ப்பு உண்டு.

சரி கல்யாணத்துக்கு அப்புறம் என்ன?

ஒரு நீலகலர் டப்பர்வேர்ல (Tupperware) சாப்பாட்ட எடுத்துக்கிட்டு ஆபீஸ் போக வேண்டியதுதான். மறந்து விடாதீர்கள் மக்களே , கல்யாணத்துக்கு அப்புறம் ஒரு பெருமா…..ற்றதுக்குத் தயாராகுங்கள்!

நண்பர்களுக்கு,

வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நான் பயணிக்கவிருப்பதால், இந்த தற்காலிக விடுப்பை மேலும் ஒரு மாதமாவது நீட்டிக்குமாறு, தோழமையுடன் கேட்டு கொள்கிறேன்.

பிரமச்சாரி,
பாலா.

ஆணிகள் நிறையாக இருப்பதால் இரண்டு மாதம் விடுப்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
பாலா.

வால்ட் டிஸ்னி மிகவும் கொடுத்து வைத்தவர், ஏனெனில் எப்போது பிடிக்கவில்லை என்றாலும் நடிகர்களை கிழித்து எரிந்து விடுவார்.

– ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்

hitchcock

பெரும்பாலும் ”மெக்குஃபின்” யுக்தியை தனது திரைபடங்களில் பயன்படுத்தி,  அதை பிரபலப்படுத்தியவர் ஹிட்ச்காக்.

McGuffin (மெக்குஃபின்) என்றால் என்ன?

பார்வையாளரை ஈர்க்க/கட்டிபோட, கதையின் போக்கை நகர்த்தக்கூடிய இருக்கும்/இல்லாத ஒரு பொருளோ/விஷயமே மெக்குஃபின் ஆகும்.கதையின் பாத்திரங்கள் அதை சுற்றியே/நாடியே ஓடிக்கொண்டு இருப்பார்கள். உளவாளிகள் பற்றிய படத்தில் அத்தியாவசியமாக இருக்கும் இந்த மெக்குஃபின், ஒரு நாட்டின் ராணுவ ரகசியமாகவோ/அரசாங்க ரகசியமாகவோ , ஒரு சின்ன மைக்ரோ பிலிம்மாகவோ  எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

சமீபத்திய உதாரணம் “தசாவதாரம்” படத்தில் கமல்(கள்) துரத்தும் வயல் (phial).

ஏன், நமக்கு வரும் பரிசு பொருள்கள் கூட ஒரு மெக்குஃபின் தான். உள்ளே இருக்கும் பரிசு பொருளை விட அதை நாம் தபால்காரரிடம்  காத்திருந்து பெற்று, அந்த தபாலை பிரிக்கும் அந்த விறுவிறுப்பும் குறுகுறுப்பும் அந்த பரிசு பொருளை விடவும் அதிகம் தானே?

இனி இந்த யுக்தியை கொண்டு அவர் இயக்கிய திரை வரிசையை பாப்போம்.

PSYCHO (குளித்து விட்டு வந்து பார்க்க)

psycho

ஹிட்ச்காக் இயக்கிய கருப்பு வெள்ளை திரைப்படம்.இந்த படம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையில்லை.

அரிசோனா மாகாணத்தில் வாழும் மேரியானுக்கு, (Janet leigh) தன் காதலன் சாமை (John Gavin) மணந்து கொள்வதில் ஒரு பிரச்சனை!  அவனுடைய முன்னால் மனைவிக்கு  திருப்பிதர வேண்டிய கடனும், ஜீவனாம்சமாக பெருந்தொகையும் (நமது நாட்டில் உள்ளதை போல ஐந்நூறு,ஆயிரமல்ல வருமானத்தில் சரி பாதி) கொடுக்க  நிதிநிலை சரியில்லாதது.இதற்க்காக தான் வேலை பார்க்கும் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஒரு வாடிக்கையாளருக்கு கொடுக்கவேண்டிய  40,000 டாலரை எடுத்து கொண்டு(திருடிக்கொண்டு) தன் காதலனை தேடி கலிபோர்னியா விரைகிறாள்.

பதட்டத்துடன் செல்லும் அவள் நெடுநேர பயணக்களிப்பில்   நெடுஞ்சாலையிலேயே தூங்கி விடுகிறாள்.  நடு நசியில் தூங்கிக்கொண்டிருப்பவளை ஒரு காவல் அதிகாரி எழுப்பி இவ்வாறு செய்யக்கூடாதென்றும், வழியில் உள்ள ஏதோனும் மோட்டலில் தங்குமாறு அறிவுறுத்துகிறார். பின் அவளது நடவடிக்கை சர்ச்சை அளிக்கவே தொடரவும் செய்கிறார். இதனால் பதட்டமடைந்த மேரியான், இந்த காரை விற்று வேறு புதிய கார் வாங்கி தன் பயணத்தை தொடர்கிறாள். அங்கும் அந்த போலீஸ் அதிகாரி வர, நெடுஞ்சாலையில் இருந்து விலகி வேறொரு பாதையில் செல்கிறாள். அங்கு தனிமையில் ஆள் அரவமற்று, அமானுஷ்யமாக காட்சியளிக்கிற ஒரு வீடும் அதை ஒட்டியே ஒரு மோட்டல் இருப்பதையும் காண்கிறாள். மழை வேறு பெய்து கொண்டு இருப்பதால் வழி இல்லாமல், யோசனைக்கு பின் அங்கு தங்க முடிவெடுக்கிறாள்.

அந்த விடுதியின் முதலாளி நார்மன் (Antony Perkins), அங்கு புதிதாக ஒரு புறவழிச்சாலை போடப்பட்டதால் தன் விடுதிக்கு வாடிக்கையாளர்கள் வருவது கணிசமாக குறைந்து விட்டதாகவும், இங்கு தனது தாயாருடன் வசிப்பதாகவும் கூறுகிறான். வெளியே மழை பெய்து கொண்டு இருப்பதால் தானே இரவு உணவு கொடுப்பதாகவும் வீட்டுக்கு சொல்கிறான்.

அங்கு நார்மனும் அவனது தாயாரும் சண்டையிடுவதையும், அவர் சற்று மனநிலை சரியில்லாதவர் போல கத்துவதும், மேரியான் பற்றி தரகுறைவாக பேசுவதையும் கேட்க நேரிடுகிறது. பின் உணவருந்தும் போது அதை பற்றி விவாதிக்கையில்  பிதற்றிக்கொண்டு இருக்கும் நார்மனின் தாயாரை ஒரு காப்பகத்தில் சேர்க்க அறிவுறுத்துகிறாள். கோபப்பட்ட நார்மன் தனது தாயார்தான் தனக்கு உற்ற  தோழி எனவும், எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தும் எனக்கூறுகிறான்.

உணவருந்திய பின் தனது அறைக்கு வந்த இரவு உடைக்கு மாறுகிறாள். அவள் ஆடை மாற்றுவதை பக்கத்து அறையின் ஒரு துவாரம் வழியாக நார்மன் பார்க்கிறான். சிறுது நேரத்தில் வீட்டுக்கு சென்று விடுகிறான்.மேரியான் செலவு கணக்கை பார்த்து விட்டு அங்கிருக்கும் ஒரு செய்தித்தாளில் பணத்தை சுற்றி வைத்துவிட்டு பிறகு குளிப்பதற்காக செல்கிறாள்..

மேரியான் குளியல் அறையில் குளித்துக்கொண்டு இருக்கிறாள்.அப்போது திரைசீலைக்கு பின் ஒரு பெண்ணின் உருவம் மெதுவாக கதவை திறந்து உள்ளே வருகிறது. பிறகு கூர்மையான் கத்தியால் பலமுறை பாய்ச்சி கொல்கிறது. திரைசீலையை பிடித்த படி  அங்கேயே விழுந்து மடிகிறாள் மேரியான். சற்றைக்கெல்லாம் நார்மன் தனது தாயாரை கடிந்து கொள்ளும் குரல் கேட்கிறது. வந்து பார்க்கும் நார்மன் அவளது சடலத்தையும், உடமைகளையும் (அறியாமல் பணம் சுற்றி உள்ள செய்தித்தாளையும் சேர்த்து) அப்புறப்படுத்தி ஊருக்கு வெளியே உள்ள ஒரு குளத்தில் காரை தள்ளி விடுகிறான்.

மேரியானின் தங்கை லிலாவும், களவாடிய பணத்தை கைப்பற்ற மேரியானின் முதலாளியால் நியமிக்கபட்ட  துப்பறிவாளர் அர்போகாஸ்டும், மேரியானை விசாரித்து சாமை அடுத்தடுத்து அவனது ஹர்ட்வேர் கடையில் வந்து விசாரிக்கிறார்கள்

ஒரு கட்டத்தில் அர்போகாஸ்ட், நார்மனின் விடுதிக்கு சென்று விசாரணை நடத்துகிறார். அவனது தாயாரையும் பார்த்து சில கேள்விகள் கேட்கவேண்டுமென சொல்கிறார்.ஆனால், தொடர்ந்து மழுப்பும் நார்மனின் பதிலில் திருப்தி அடையாத அவர்.இந்த விஷயத்தை லிலாவுக்கு தொலைபேசியில் சொல்லிவிட்டு, விரைவில் சந்திப்பதாய் சொல்லிவிட்டு நார்மனுக்கு தெரியாமல் அவன் வீட்டுக்குள் நுழைகிறார்.

மாடி படிகளில் மெதுவாக ஏறிகொண்டிருக்கும் போது திடீரென வரும் ஒரு பெண்ணுருவத்தால் கத்தியால் குத்தி கொலை செய்யபடுகிறார். அர்போகாஸ்டை தொடர்ந்து அந்த விடுதியில் லிலா வும் சாமும் கணவன் மனைவி போல் அங்கு தங்குகின்றனர்.

அவர்களும் அந்த பெண்ணுருவத்துக்கு பலி ஆனார்களா? அல்லது கண்டுபிடித்து மர்மத்தை விடுவித்தார்களா ? என்பதை குறுந்தகட்டில் காண்க…

இந்த திரைப்படத்தில் 40,000 டாலர் தான்  மெக்குஃபின்.

மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த படத்தில் பின்னணி இசையும் (சில நேரங்களில் அமைதியும்) திகிலூட்டுவதாக அமைந்திருக்கும்.

மேலும் இந்த படத்தில் வரும் ஜேனட்டின் குளியலறை கொலை காட்சி. உலக சினிமா வரலாற்றிலேயே மிகவும் முக்கியமான, பிரபலமான காட்சி. இது பிராவோ நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் உலகத்தின் 100 உறைய வைக்கும் சினிமா காட்சிகளின் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்துள்ளது.

காட்சியின் உக்கிரத்தை கூட்ட, 90 சதவிகித காட்சியையும், ஜேனட்டின் முக பாவங்களையும்,  கத்தியின் வீச்சையும், க்ளோஸ்-அப் ஷாட்களில் வைத்திருக்கிறார் ஹிட்ச்காக்.அவ்வளவு பயங்கரமாக இந்த சீனில் கத்தி ஒருமுறை கூட மேரியானின் உடலில் பாய்வதை போல ஒரு காட்சி இருக்காது.

மொத்தம் 45 வினாடிகளில், 78 விதமான கோணங்களில் (78 seperate piece of films) படமாக்கபட்டு இருக்கிறது.

கீழே குறிப்பிட்டு உள்ளதை போல

shower

தண்ணீரை மேல் நோக்கி நேராக படமாக்க, ஒரு நீளமான லென்ஸ்சை கீழே பொருத்தி, பின் ஷவரின் உள் துளைகளை அடைத்து விட்டு, தண்ணீர் லென்சுக்கு வெளியே விழும் படி எடுத்திருகிறார்கள்.

கத்தி உடலில் பாயும் சத்தத்தை ஒலிப்பதிவு செய்ய பல சோதனைகளுக்கு பிறகு கசாபா எனப்படுகிற பழத்தில் கதியை பாய்ச்சி பதிவு செய்திருக்கிறார்கள்.

ஜேனட் கொலையாகி கீழே விழுந்த பிறகு ரத்தம் (சாக்லேட் சிரப்) தண்ணீரோடு கலந்து சுழற்ச்சியோடு பாத்டப்பின் டிரைன் ஹோல் வழியே வெளியேறுவதை க்ளோஸ் அப்பில் கட்டிய படி அடுத்த சாட் அதே சுழற்ச்சியில் ஜேனட்டின்  குத்திட்ட விழிகளில் இருந்து கேமரா சூம்  அவுட் ஆகும். பார்ப்பதற்கு ஒரு ஸ்டில் போட்டோ சுழல்வதை போல  போல இருக்கும் அந்த காட்சி, ஜேனட்டின் தலையில் இருந்து ஒரு துளி நீர் சொட்டும் போது தான் அது வீடியோ என்பது புலப்படும். அவ்வளவு தத்ருபமான நடிப்பு!

இந்த படம் வெளியான காலகட்டத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்மணிகள், குளிக்கவே பயந்திருக்கிறார்கள். அப்போது ஒரு தந்தையிடம் இருந்து  தனது மகள் குளித்து சில நாட்கள் ஆகிறதென்று எல்லாம் உங்களால் தான் என்று கோபமான கடிதம் வந்திருக்கிறது. குறும்புக்கு பெயர் போன ஹிட்ச்காக் அவருக்கு இப்படி பதிலளித்தார். “முதலில் அவளை உலர் சலவையகத்துக்கு அனுப்புங்கள்” என்று.

த்ரில்லர் பட பிரியர்கள் பார்த்தே ஆக வேண்டிய படம்!

அதாரம்: காண்பனுபவம், இணையம்.

விரைவில் எதிர்பாருங்கள்!!!

untitled1

பின்குறிப்பு/சுய விளம்பரம்:

youthful vikatan

‘நகங்களை இழக்க விருப்பமுள்ளவர்களுக்கு! ‘ கட்டுரையை  ‘குட்’ … Blogs பகுதியில் வெளியிட்ட விகடனுக்கு நன்றிகள்!

“இயல்பாகவே நகைச்சுவை உணர்வு கொண்டவராக  இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் ஏன் காமெடி படங்களே எடுப்பதில்லை?”


“ஏன், நான் எடுக்கும் ஒவ்வொரு படங்களுமே மிகப்பெரிய காமெடி தானே!”

- ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்

alfred-hitchcock

நடு நசி, யாருமற்ற தனிமை, ஹிட்ச்காக்கின் சினிமா!

இவரது திரைப்படங்களை பார்ப்பதற்கென்று நான் வகுத்துக்கொண்ட கட்டமைப்பு இது. காதுகளுக்கு ஹெட் போன் அணிந்தால் கூடுதல் சிறப்பு.

சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் படங்களின் பிதாமகர் ஆல்ப்ரெட் ஹிட்ச்காக்கின் ஏதேனும் ஒரு திரைப்படத்தை பார்த்தால்தான் இப்போதெல்லாம்  வார இறுதி முழுமை பெற்றதாக ஆகிறது.சனிகிழமை இரவு ஒன்பது மணி ஆனாலே கைகள் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன. ஆம், ஹிட்ச்காக்கின் சினிமா- ஒரு போதைதான்.

சாதாரண மனிதர்களை அசாதாரணமான சூழ்நிலைகளில் கிடத்துபவையாக இருக்கும் இவரது திரைபடங்களில் வசனங்களை விட காட்சிக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இவரது படங்கள் ஒரு கொலை, பின் அதை கண்டுபிடிக்கும் சம்பவங்களாக மட்டும் அல்லாமல் கொலையாளின் கொலைக்கு முன்/பின் சுபாவங்கள், நடவடிக்கைகள், பேச்சு போன்றவற்றை உளவியல் ரீதியாக அணுகுபவையாக இருக்கும். கதை சொல்லும் விதத்திலும், காட்சிப்படுத்தும் விதத்திலும் தனது ஒவ்வொரு திரைபடங்களிலும் ஏதேனும் ஒரு பரிசோதனை/புதிய முயற்சியை மேற்கொள்வார்.

கிட்டதட்ட அரை நூற்றாண்டு கால சினிமா வாழ்வில் 50க்கும் மேற்பட்ட திரைபடங்களை இவர் இயக்கியுள்ளார். இவற்றில் பெரும்பாலானவை மிகவும் பிரபல்யமானவை.

1899ல் கிழக்கு லண்டனில் பிறந்த இவர் ஆரம்ப காலங்களில் டிசைனராக ஒரு கேபிள் கம்பெனியில் பணியாற்றினார். பின்பு “பாரமௌன்ட் பிக்சர்ஸ்” நிறுவனத்தில் டைட்டில் கார்டு டிசைனராக பணியாற்றி கொண்டிருந்த சமயத்தில் ”Always Tell Your Wife” படத்தை இயக்கி கொண்டிருந்த இயக்குனர் நோய் வாய்ப்பட, மீதி படத்தை இயக்க வேண்டிய வாய்ப்பு இவருக்கு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் இவர் இயக்கிய “Number 13″ படமும் பாதியில் கைவிடப்பட இறுதியாக இவரது முழுமையான இயக்கத்தில் 1925ல் மௌன திரைப்படம் “Pleasure garden” வெளிவந்தது.ஆனால் அந்த படம் வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.

அடுத்து வெளி வந்த  “The Lodger” வணிக ரீதியாக வெற்றி பெற்றதோடல்லாமல் இவரை முதல் தர இயக்குனராக அனைவரையும் உற்று நோக்க செய்தது.இந்த கால கட்டத்தில் தனது உதவி இயக்குனரான “அல்மா ரேவில்”ஐ 1928ல் மணந்தார்.

மெல்ல மௌன படங்களில் இருந்து தனது முதல் ஒலிஒளி திரைப்படமான “Black Mail” ஐ 1929ல் இயக்கினார். அப்போது அது  அவருக்கு பத்தாவது படம்.அடுத்தடுத்து ”The Man who knew too much” (1934) , “The 39 steps” (1935) படங்களின் இமாலய வெற்றியின் மூலம் அவருக்கென்று ஒரு பாணியோடு, தனி தன்மையுடன்  பிரிட்டன் திரையுலகின் முன்னணி இயக்குனர் ஆனார்.

பின்பு  “The Lady Vanishes” (1938)இன் மற்றுமொரு வெற்றியை தொடர்ந்து 1939களின் முடிவில் ஆஸ்கார் விருதுடன் பெருவெற்றி பெற்ற “Gone with the wind (1939)ன் ஹாலிவுட் பட  தயாரிப்பாளர் David O. Selznick இவரை தொடர்ந்து ஏழு ஆண்டுகள் ஒப்பந்தம் செய்து இவரை அமெரிக்காவுக்கு அழைத்து கொண்டார்.

அவரது முதல் ஹாலிவுட் படமான “Rebecca” (1940)க்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து Shadow of a doubt (1943), Life boat (1943), Spell bound (1945),  Notorious(1946), Rope (1948), போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்.

ஹிட்ச்காக்கின் பொற்காலம் என வர்ணிக்கப்பட்ட 1950களில் தான் அவரது புதிய பரிமாணங்களை வெளிப்படுத்தினார். Strangers on a train (1951), I confess (1953), Dial M for Murder (1954), Rear window (1954), தன்னுடைய மறுபதிப்பான The Man who knew too much (1956), Vertigo (1958), North by Northwest (1959) போன்ற வெற்றி படங்களை எடுத்தார்.

1956ல் அமெரிக்க குடியுரிமை பெற்ற போதும், பிரிட்டிஷ் குடியுரிமையையும் தக்க வைத்துக்கொண்டார்.

அறுபதுகளில், அவரது கிளாசிக் த்ரில்லரான  Psyco(1960), The Birds (1963),  Marnie (1964), Torn curatin (1966), Topaz (1969) என்று மேலும் ஐந்து வெற்றிப்படங்களை கொடுத்தார்.

சினிமாவில் தீவிரமாக இருந்த போதும் Alfred Hitchcock Presents (1955-62) மற்றும்  The Alfred Hitchcock Hour (1962-1965) என்று இரண்டு தொலைகாட்சி தொடரையும் இயக்கினார்.

தனது இறுதி படமான Family Plot (1976)க்கு முன்பு Frenzy (1972) என்ற வெற்றி படத்தையும் கொடுத்தார்.

பின்பு 1979 ல் இங்கிலாந்து அரசு இவருக்கு “Sir” பட்டம் வழங்கி கௌரவித்தது.

வளரும் இயக்குனர்களால் அதிகம் ஆராயப்பட்ட, படிக்கப்பட்ட ஒரு இயக்குனராக திரை உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய இவர் 1980 ஆம் ஆண்டு தனது எண்பதாவது வயதில் சிறுநீரக கோளாறு காரணமாக லாஸ் ஏஞ்சல்ஸ்சில்  உயிர் இழந்தார்.

பொதுவாக மக்களுக்கு பயத்தின் மேல் உள்ள ரகசிய ஆசையே (பெருகி வரும் தீம் பார்க்களின் எண்ணிக்கையே இதற்க்கு சான்று) இவரது வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கிய காரணம்.

ஏனெனில் நமக்கு எப்போதும் பயம் என்ற குளிர்ந்த நீரில் காலை விட்டு பார்ப்பதில் ஆனந்தம்தானே?

ஒரே லொக்கேசன்

ஒரே ஒரு பாட்டுக்கு நாலு கோடியும், நாப்பது லொக்கேசனும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், ஒரு முழு திரைப்படமும் எடுக்க அவருக்கு ஒரு ஒரு லொக்கேசன் இருந்தாலே போதும். இதற்க்கு உதாரணமான திரைபடங்களை வரிசையாக அடுக்கலாம்.

படங்களின் தலைப்பை சொடுக்கி ட்ரைலரை பார்க்கலாம்….

Life boat (1943)

lifeboat2

அட்லாண்டிக் கடலில் இரண்டாம் உலகபோரில் ஒரு பிரிட்டிஷ் அமெரிக்க பயணிகள் கப்பலும், ஜெர்மனியின் U-Boat ம் மோதலில் ஈடுபட்டு மூழ்க பலவேறு தரப்பட்ட பயணிகள் ஒரு உயிர் காக்கும் படகில் தஞ்சம் அடைகின்றனர். சிறுது நேரத்தில் கடலில் தத்தளித்து கொண்டிருக்கும் ஒரு ஜெர்மனியனை பலத்த வாக்கு வாதங்களுக்கு பிறகு அனுமதிக்கிறார்கள். ஆனால் அனுமதிக்கபட்டவன் யார்?

இந்த பின்னணியில் சஸ்பன்ஸ் மற்றும் த்ரில்லிங்குடன் தனக்கே உரிய பாணியில் இயக்கி இருப்பார் ஹிட்ச்காக். இந்த திரைப்படம் முழுவதும் Life boat என்று சொல்ல கூடிய உயிர் காக்கும் படகில் வைத்ததே எடுத்திருப்பார். படகு மற்றும் கடல் இவ்வளவுதான் லொக்கேசன்.

மிகச்சிறிய செட்டில் எடுக்க பட்ட திரைப்படம் என்ற உலக சாதனையை 65 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் முறியடிக்கப்பட முடியாமல் தக்க வைத்துக்கொண்டுள்ளது இந்த திரைப்படம்.

Rope (1948)

rope

ஒரு உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அவருடைய முதல் டெக்னிக் கலர் படம்.

ஒரு தினவுக்கவும், சுவாரஸ்யத்திற்காகவும் ஒரு கொலையை செய்து விட்டு தங்களால் மறைக்கவும் முடியும் என்று நிரூபிப்பதற்காக அமுதன், இளமாறன் போல இரண்டு வாலிபர்கள் தங்களுக்கு பிடிக்காத ஒரு நண்பனை தங்களது அப்பார்ட்மென்டில் வைத்தே கொலை செய்கின்றனர். அவனை ஒரு மரப்பெட்டியில் அடைத்துவிட்டு அதை விருந்து உபசரிக்கும் மேசையாக்கி அவனது பெற்றோர், முன்னாள் ஆசிரியர் (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்), காதலி மற்றும் சிலரையும் விருந்துக்கு அழைகிறார்கள். இப்படியாக பயணிக்கும் கதையை ஒரு பெரிய ஹாலில் வைத்தே, (கிட்டதட்ட மேடை நாடக செட் போல) முழு திரை படத்தையும் விறுவிறுப்பு குறையாமல் எடுத்திருப்பார்.

இந்த படத்தின் மிக முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால், படம் முழுவதும் ஒரே ஷாட்டில் எடுத்ததை போல தோற்றமளிக்க செய்திருப்பார்.

அந்த கால கட்டத்தில் தொடர்ந்து பத்து நிமிடங்களே ஒளிப்பதிவு செய்யும் வசதி இருந்திருக்கிறது. ஆகையால் முதல் ஷாட்  9:34 நொடிகளில் ஒரு நடிகரின் முதுகில் கருமையாக  முடிய இரண்டாவது ஷாட் அவரது முதுகில் இருந்தே தொடங்கும். இப்படியாக 81 நிமிடம் ஓடக்கூடிய இந்த திரைப்படத்தை மிகத்திறமையாக பத்தே ஷாட்களில் முடித்திருப்பார்.

Rear Window (1954)

rear-window33

விமர்சகர்களால் ஹிட்ச்காக்கின் சிறந்த படமாக கருதப்படும் படம்.

சதுர வடிவில் உள்ள ஒரு பிளாட்டில் கால் முறிந்து வீல் சேரில் இருக்கும் ஒரு புகைப்பட கலைஞனுக்கு  (ஜேம்ஸ் ஸ்டீவர்ட்),  நாளெல்லாம் ஜன்னலில் அமர்ந்தபடி மற்ற பிளாட்டில்  நடப்பவைகளை பைனாகுலர் மூலம் நோட்டம் விடுவதே பொழுதுபோக்கு  . தினமும் இவனை சந்திக்க வரும் காதலியிடமும் (கிரேஸ் கெலி) , நர்சுடனும் நடந்தவைகளை/நடப்பவைகளை பற்றி புரளி பேசுவது இவனது வாடிக்கை. இந்த சூழ்நிலையில் ஒரு நாள் எதிர் பிளாட்டில் இருக்கும் சேல்ஸ்மேனுடைய மனைவி மர்மமான முறையில் காணாமல் போக சூழ்நிலைகளையும், நடந்தவைகளையும் கிரகிக்க சேல்ஸ்மேன் தான் அவளை கொன்று இருக்க வேண்டுமென கருதுகிறான். அவனது யூகம் தவறா ? அல்லது இவன் காதலியின் துணை கொண்டு இதை துப்பறிந்து வெளிகொனர்கிறானா? என்பது மீதி கதை.

ஒரு அப்பார்ட்மென்ட் செட்டில் விறுவிறுப்பாக இயக்கியதை விட கூடுதல் விசேஷம் படத்தில் மொத்தம் இரண்டே கேமரா கோணங்கள் தான். ஒன்று ஜன்னலுக்கு வெளியே, ஜன்னலுக்கு உள்ளே !!

Dial M for Murder (1954)

dial_m_for_murder

எனக்கு மிகவும் பிடித்த ஹிட்ச்காக்கின் திரைப்படம்.

ஒரு பத்து நிமிடம் பார்த்து விட்டு நாளை முழுதாக பாரக்கலாம் என்றெண்ணி பார்க்க ஆரம்பித்தவன் படம் முடிந்து End credits  போடும் போதுதான் சுய நினைவிற்கு வந்தேன்.

ஒரு முன்னால் பிரிட்டைன் டென்னிஸ் வீரன், பணத்திற்காகவும், திருமணத்திற்கு முன்பு ஒரு அமெரிக்க கிரைம் நாவல் எழுத்தாளர் ஒருவனுடன் உறவு வைத்து  இருந்ததற்காகவும் சொந்த மனைவியை  (கிரேஸ் கெலி) கொலை செய்ய முடிவு செய்கிறான். மிக நேர்த்தியாக திட்டமிட்டு ஒருவனை கொலை செய்ய பணியாமர்த்துகிறான். திட்டம் இதுதான் மனைவியின் பழைய காதலன் ஊர் திரும்பியதும், அலிபிக்காக அவனோடு இரவு பார்ட்டிக்கு செல்ல வேண்டியது. வீட்டின் இரண்டு சாவியில் ஒரு சாவியை தன்னுடைய மனைவியின் கைபையில் இருந்து திருடி மாடிபடிகளில் ஒளித்து வைக்க வேண்டியது, இவர்கள் பார்டியில் இருக்கும் நேரம் கொலையாளி அந்த சாவியை உபயோகபடுத்தி வீட்டுக்குள் சென்று ஹாலில் ஒளிந்து கொள்ள வேண்டியது. மிகச்சரியாக  11 மணிக்கு இவன் வீட்டுக்கு போன் செய்ய வேண்டியது, அவள் தொலை பேசியை எடுத்து ஹலோ சொல்லும் போது கொலையாளி பின்னால் இருந்து ஸ்கார்ப் மூலம் அவள் கழுத்தை நெரித்து கொலை செய்து, திருட வந்தவன் எதேச்சையாக கொலை செய்தது போல  தப்பிக்க வேண்டியது.

பல இடர்பாடுகளுக்கிடையே எல்லாம் சரியாக நடக்க 11 மணிக்கு தொலை பேசி மணி ஒலிக்கிறது..

கிரேஸ் கெல்லி தனது படுக்கை அறையில் இருந்து எழுந்து  இருளடர்ந்த ஹாலுக்கு வந்து தொலை பேசியை எடுக்க எதிர்முனையில் அவள் கணவன் மெளனமாக இருக்க, ஹலோ ஹலோ என கிரேஸ்  கேட்டுக்கொண்டே இருக்க பின்னால் இருந்து கொலையாளி கிரேஸ் கெல்லியின் மயில் கழுத்தை நெரிக்க முன்னேறுகிறான்……..பிறகு?????

மிக சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்த திரைப்படத்தில் ஒளி அமைப்பும் ஒரு கதாபாத்திரமாகவே இருக்கும். பல திருப்பங்களை கொண்ட இந்த விறுவிறுப்பான திரைபடத்தை அவர் 90 சதவிகிதம் ஒரே ஹாலில் வைத்தே இயக்கி இருப்பார். மீதி 10 சதவிகிதம் வேறு இரண்டு செட்களில் எடுக்கபட்டு இருக்கும்.

விரைவில்!

McGuffin (மெக்குஃபின்) டெக்னிக் சார்ந்த படங்கள்:

hitchcock5

ஹிட்ச்காக் சூம்/ டாலி சூம் டெக்னிக் சார்ந்த படங்கள்:

sc-marnie1

Older Posts »

Follow

Get every new post delivered to your Inbox.